தெள்ளத் தெளிந்த வானம்,
பளிங்கு வெயில்...
மயான அமைதி...
மிக மெல்லிய காற்றின் அரவம்....
காலில் மிதிபடும் சருகுகளின் சப்தம்...
பல நொடிகள் கசிகின்றன,
மிக தொலைவில் யாரோ அழைப்பது போன்ற குரல்...
திரும்பிப் பார்கையில், தொலைவில், எதோ நடப்பது போன்ற உணர்வு,
சருகுகள் பறக்கின்றன, மரங்கள் அசைகின்றன,
நிகழ்வுகள் என்னை நெருங்குகின்றன...
எங்கும் புழுதி, சருகுகள் பறக்க விழிகளை மூடிக் கொள்கிறேன்...
காற்றின் ஊங்காரம் செவிகளை அடைக்கிறது...
சில நொடிகளில் நிகழ்வுகளின் வேகம் குறைகிறது...
தெளிந்த வானமும், மெல்லிய காற்றும் என்னைச் சூழ்கின்றது...
-- என் வாழ்கை...
No comments:
Post a Comment